--- --:--:-- --

கல்கி ஆசிரமத்தில் 4ஆவது நாளாக ஐ.டி. சோதனை

1

கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் நான்காவது நாளாக சோதனை நீடித்து வருகிறது. தமிழகம் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. வரியைப் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 16 ஆம் தேதி அந்த இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.

 

தொடர் விசாரணையில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் 500 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய சோதனையில் சுமார் 93 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 26 கோடி ரூபாய் மதிப்புடைய 88 கிலோ தங்கமும் ஐந்து கோடி ரூபாய் மதிப்புடைய வைர நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon