நடுவானில் ஏற்பட்ட கோளாறால்.. அவசர அவசரமாக விமானம் தரையிறக்கம்..!
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் கியர் பழுதடைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் திருவனந்தபுரத்தில் அவசர அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்டது.





