கூட்ட நெரிசல் வழக்கு – சி.பி.ஐ கரூர் வருகை
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் இன்று கரூர் வருகின்றனர்.
ஐ.பி.எஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள், சி.பி.ஐ ஏ.டி.எஸ்.பி முகேஷ்குமார், டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் ஆகியோரும் கரூர் வருகை தர உள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் குறித்து இன்று அல்லது நாளை சி.பி.ஐ விசாரணை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





