108 ஆம்புலன்ஸில் முதல் பெண் ஓட்டுநர் நியமனம்..!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டயத்தை சேர்ந்த சேர்ந்த தீபா மோல் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அதற்கான சாவியை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா சார்ஜ் வழங்கினார்.
மேலும் ஆர்வமுள்ள பெண்களை சேர்க்க அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.






