பெற்ற குழந்தையை கொலை செய்து ஓடையில் வீசிய கொடூர தாய்..!
பெற்றக் குழந்தையை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபிரியா என்ற பெண் தனது 11 மாத குழந்தையை தூக்கிக் கொண்டு ஆண் நண்பருடன் கேரள மாநில மலப்புரத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அவரை தேடி கண்டுபிடித்த உறவினர்கள் குழந்தை இல்லாததால் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் ஸ்ரீ பிரியாவும் அவரது நண்பரும் குழந்தையை கொன்று பையில் வைத்து ஓடையில் வீசியது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





