வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவன்..!
கேரளாவில் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞர் ஒருவர் காசர்கோடு பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
போலீசார் சோதனை செய்ததில் கடந்த மூன்று மாதங்களாக கஞ்சா செடி வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.






