கல்லூரி வேனுடன் நேருக்கு நேர் மோதிய கார்..!
திருப்பதி அருகே கல்லூரி வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் நிலையம் அருகே இந்த பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த கார் மற்றும் கல்லூரி வேன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் நான்கு பேர் சம்பவ இடத்ததிலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புதூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.






