20அடி ஆழ கால்வாயில் தவறி விழுந்த குழந்தையை குதித்து காப்பாற்றிய தாய்.!
இங்கிலாந்து நாட்டின் தென் கவுண்டி பகுதியில் 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தையை அதன் தாய் பாய்ந்து சென்று குதித்து காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
23 வயதான இளம்பெண் தனது 18 மாத குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பொழுது அந்த குழந்தை எதிர்பாராத விதமாக வழியில் இருந்த 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதை கண்ட அந்த தாய் அதிர்ச்சி அடைந்து பாய்ந்து சென்று கால்வாயில் குதித்து பத்திரமாக வெளியே எடுத்தார். இந்த சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.






