தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை..!
சென்னையின் புறநகர் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், மணவாளநகர், பூண்டி, திருவூர், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்தது.
திருவத்திபுரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.





