டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் புதுக்கோட்டை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
குமரி கடல் பகுதிக்கு மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 14 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.






