வீட்டுக்குள் புகுந்து எலியை விழுங்கிய நாகப்பாம்பு..!
கடலூர் மாவட்டத்தில் வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்று எலியை விழுங்குவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குமார் என்பவரின் வீட்டில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட அந்த குடும்பத்தினர் பாம்பு பிடிக்கும் வீரரான செல்வத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்தவர் நாக பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்துள்ளார்.






