புதிய பெருந்தொற்று வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது..!
இந்தியாவில் புதிய பெருந்தொற்று வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக தொற்று ஏற்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் பிறழ்வை கொண்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய பெருந்தொற்று அதிக தொற்று ஏற்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் பிறழ்வையும் கொண்டுள்ளது. ஆனால் இது இந்தியாவிலோ அல்லது மேற்கு வங்கத்திலோ வைரஸ் அதிகரிப்பதற்குக் காரணமாகியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் தகவலை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த புதிய வகை வைரஸ் B1.61A என அழைக்கப்படுகிறது. இது இரட்டை பிறழ்வு வைரஸ் என அறியப்படுகிறது. இது குறித்து பேசிய டெல்லி சிஎஸ்ஐஆர் மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் நிலையான பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது போதுமானது எனவும் தெரிவித்தனர்.






