யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என கூறிய போதையில் கார் ஒட்டிய நடிகை.!
யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என மது போதையில் கார் ஓட்டிய நடிகை வம்ஷிகா விளக்கம் அளித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன ஓட்டிகள் மடக்கிப்பிடித்தனர்.
காரை ஓட்டிச் சென்றது நடிகை வம்ஷிகா என தெரியவந்தது. மது போதையில் இருப்பதை உறுதி செய்த பாண்டிபஜார் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த வம்ஷிகா மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு தான் எனினும் சுயநினைவுடன் தான் வாகனம் ஓட்டியதாக கூறினார்.







