பழிவாங்கும் வகையிலான தாக்குதலே அமுதன் மரணத்திற்கு காரணம் – அமைச்சர் நிர்மல்குமார் பதில்
கடந்த 10 ஆம் தேதியே மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பிறகு 11 ஆம் தேதி அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமுதன் உள்ளிட்டோர் சக மாணவர்களை தாக்கியது தொடர்பாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழிவாங்கும் வகையிலான தாக்குதலே அமுதன் மரணத்திற்கு காரணம். பழிவாங்கும் சம்பவங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமுதன் இறப்பால் துயரத்தால் இருக்கும் குடும்பத்தினரை அமைச்சர்கள் 15 ஆம் தேதி சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் – அமைச்சர் நிர்மல்குமார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




