மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் போராட்டம் அறிவித்து நடத்தி வருவதால் தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.