செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற அவகாசம் நீட்டிப்பு..!
சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான அவகாசம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற நவ.23 இறுதி நாளாக இருந்த நிலையில், செல்லப் பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது டிச.7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.






