திமுக மூத்த தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்!
திமுகவின் மூத்த தலைவரும், கோவில்பட்டி முகமாக இருந்த நகரமன்ற முன்னாள் தலைவருமான ஆர்.பாலசுப்ரமணியன் காலமானார். கோவில்பட்டி தொகுதி என்றாலே இவர் தான் ஒருகாலத்தில் அடையாள முகம். அந்த அளவுக்கு கட்சியில் செல்வாக்கு படைத்தவர்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு முக்கிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





