இனி அனைத்து பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 அல்ல… ரூ.2500..!
தமிழகத்தில் தான் முதன்முதலில் பெண்களுக்கு மாதம் மாதம் பணம் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, மாதம் ரூ.1000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தமிழகத்தைப் பார்த்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தைப் பின்பற்றின. இதனால், இந்தியா முழுவதும் இந்த திட்டம் பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. இரண்டிலுமே ஆளுங்கட்சிகள் வெற்றிபெற்றன.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கூட்டணியும் ஆட்சியைத் தக்கவைத்தன. இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது பெண் வாக்காளர்களின் வாக்குகள் தான். தமிழகத்தில் இருப்பது போல் மகளிர் உரிமைத் தொகை இந்த இரண்டு மாநிலங்களிலும் வழங்கப்பட்டது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் ‘லட்கி பெஹன் யோஜனா’ என்கிற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.இத்திட்டத்தில் 2.5 கோடி பெண்களுக்குத் தேர்தல் வரை தலா ரூ.1,500 வீதம் ஐந்து தவணையாக வழங்கப்பட்டது. மேலும் இது விரிவுப்படுத்தப்பட்டு, ரூ.2,100 ஆக அதிகரிக்கப்படும் என மகாயுதி கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.
இந்த வாக்குறுதிகள் வாக்குகளாக மாற, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை விட, தற்போது 53 லட்சம் பெண்கள் அதாவது 6 சதவிகிதம் பேர் கூடுதலாக ஆளும் கட்சிக்கு வாக்களித்தனர்.இப்படி, ஆட்சி அதிகாரத்திற்கும் மகளிர் உதவித் தொகை திட்டங்கள் உதவுவதால் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களிலும் மகளிர் உதவித் தொகையில் வழங்கப்படும் தொகை அதிகரித்து அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலையொட்டி, அங்கும் பெண்களின் வாக்குகளை கவர மகளிர் உதவித் தொகை திட்டத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது.
தற்போது சட்டசபைத் தேர்தல் அறிவிப்பையொட்டி அந்த தொகையை ரூ.2100 ஆக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.தற்போது காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது.
அதன்படி, டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் அன்புச்சகோதரி திட்டமாக மகளிர் உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டு மாதம் ரூ.2500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அதிரடியாக அறிவித்துள்ளது. டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால், மகளிர் உதவித் தொகை திட்டத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





