நான் முதல்வன் திட்டம் – மேற்கு மாவட்டங்கள் முதலிடம்
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் 2024ஆம் ஆண்டு பதிவு செய்த 3.23 லட்சம் பொறியியல் மாணவர்களில் அதிகபட்சமாக மேற்கு மாவட்டங்களில் இருந்து 96,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து அதிகமான மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். நான் முதல்வன் திட்டம் குறித்து கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வால் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.






