மெட்ரோவில் நடந்த அதிர்ச்சி..உறைந்து போன பெண் பயணி..!
திருவெற்றியூர் வெண்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த மாதம் நுழைவு வாயில் கண்ணாடி கதவு ஒன்று திடீரென்று சுக்கு நூறாக உடைந்து விழுந்த காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.
பெண் பயணி ஒருவர் உள்ளே செல்லும் சமயம் கண்ணாடி உடைந்த நிலையில் அவர் நூலிழையில் காயம் இன்றி தப்பினார். அதிர்வு மற்றும் வெப்பம் காரணமாக கண்ணாடி உடைந்திருக்கலாம் என மெட்ரோ நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






