கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேர் கைது
கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 3 படகுகள், வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து பாம்பனில் நாளை சாலை மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 485 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.






