--- --:--:-- --

ஆளுநருக்கு எதிராக வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் – கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..!

9

மிழ்நாடு ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்தை அலட்சியம் செய்து அத்துமீறியும் சிறுமைப்படுத்தியும் செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

 

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆளுநர் ரவி அண்மை காலமாக கம்யூனிஸ்ட் குறித்தும் கார்ல் மார்க்ஸ் குறித்தும் விஷம தனமான கருத்துக்களை தெரிவித்து தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon