ரயிலில் பயணம் செய்த பெண்ணை தன் மகன் கண் முன்னே பலாத்காரம் செய்த டிக்கெட் பரிசோதகர்..!
உத்திர பிரதேசத்தில் ஓடும் ரயிலில் நண்பருடன் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பாசி ரயில் நிலையத்தில் 32 வயதான பெண் தனது 2 வயது மகனுடன் இரவு ரயிலுக்காக காத்திருந்தார்.
அந்த ரயிலின் முன்பதிவிடாத பெட்டியில் ஏறி டிக்கெட் வாங்கியிருந்தார். அந்த பெண்ணுக்கு டிக்கெட் பரிசோதனைகர் ஏசிபெட்டியில் டிக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோரி அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.
அப்பொழுது டிக்கெட் பரிசோதகரும், நண்பரும் மயக்க மருந்து கலந்த தண்ணீரை பெண்ணுக்கு கொடுத்துள்ளனர். அந்த தண்ணீரை குடித்ததும் பெண்ணுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது இரண்டு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ரயிலில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகர் பாலியல் வன்கொடுமை செய்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





