பாதியில் நின்ற லிப்ட்..உள்ளே இருந்த 8 பேரின் நிலை..!
திருவள்ளூர் அருகே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த எட்டு பேர் லிப்டில் சென்ற பொழுது சிக்கிக் கொண்டு தவித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆவடி காமராஜ் பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த கண் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காக எட்டு பேர் லிப்ட் ஏரி மேல் மாடிக்கு சென்றனர். அப்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்டில் எட்டு பேர் சிக்கிக்கொண்டார்.
இதனால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். ஒரு மணி நேரம் போராடி எட்டு பேரை பத்திரமாக மீட்டனர்.





