கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால் 6ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால் ஆறாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறாம் வகுப்பு மாணவன் கேம்மிற்கு அடிமையானதாகவும், இந்நிலையில் கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
உடலை மீட்டு போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






