சமரச பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் உக்கரையின் மீதான ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும் ஒவ்வொரு நாளும் உக்கரைனின் ஒரு பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
போர் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறியவர் இதனால் ரஷ்யா வலுவிழந்த நிலையில் இருப்பதாக யாரும் எண்ணி விடக்கூடாது என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





