ஓடும் பேருந்தில் சீட் திடீரென கழன்று ரோட்டில் விழுந்ததில் நடத்துனர் படுகாயம்..!

திருச்சி அரசு பேருந்து இருக்கை திடீரென கழன்றதால் சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர் படுகாயம் அடைந்தார். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி அரசு போக்குவரத்து கழகம் மாநகர பேருந்து சென்றது.

 

கலையரங்கம் திரையரங்கில் கடந்து வளைவில் திரும்பிய பொழுது எதிர்பாராத விதமாக நடத்தினர். முருகேசன் அமர்ந்திருந்த போல்ட் கழன்று விழுந்தது. இதனால் நடத்துனர் முருகேசன் படிக்கட்டு வழியே இருக்கையுடன் வெளியே தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார்.

 

இதை பார்த்து பயணிகள் கூச்சலிடவே ஓட்டுனர் பேருந்தை உடனே நிறுத்தினார். சாலையில் காயம் அடைந்த நிலையில் நடத்துனர் முருகேசன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

மேலும் இந்த பேருந்தில் பயணித்து பயணிகள் மற்றொரு மாநகர பேருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். நடத்துனர் வெளியே வீசப்பட்ட பொழுது அந்த வழியை ஏதேனும் வாகனம் வந்திருந்தால் நிலமை மோசமாக இருக்கும் என பயணிகள் தெரிவித்தனர்.