நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டத்திற்கு நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என்றும் மறு மார்க்கத்தில் ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் நாகர்கோயில் நெல்லை கோயில் சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
தனியார் கந்து வட்டி கொடுமை.. கட்டடத்தை சூறையாடிய மக்கள்..!
கொரியரில் போதை பொருள் கடத்தல்.. போலீசாரின் சோதனையால் பரபரப்பு..!
ஆற்றுப்பகுதிகளில் குளிக்க வேண்டாம் என கேரள வனத்துறை எச்சரிக்கை..!
பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு..!
அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்த அதிகாரிகள்..!