தொழிலாளர்களின் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக திமுக அரசு தனியே தொழிலாளர் நலத் துறையை உருவாக்கியது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் புரட்சி கவிஞர் பாரதிதாசன், தொழிலாளர் பற்றி போற்றிப் பாடியதை குறிப்பிட்டார். குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலையில் வாட்டி வதைக்கப்படும் தொழிலாளர் சமுதாயம் ரத்தம் சிந்தி போராடி பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தொழிலாளர்களை உயர்வாக மதிக்கும் இயக்கம் என்றும் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வரும் அரசு திமுக அரசு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
மோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லை.. திட்டி தீர்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாந்தி வில்லியம்ஸ்
சினிமாவில் நடந்த அந்த கசப்பான சம்பவம்..!
சண்டையிட்டுக் கொண்டு பெண் மீது விழுந்த மாடுகள்..!
தலைகீழாக நிற்கும் கீர்த்தி சுரேஷ்.. வீடியோ பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!
தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு..!
மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவனை கொலை செய்த கணவன்..!