ரகசிய பின் நம்பர் சிஸ்டத்தை பயன்படுத்தி பணம் கொள்ளை..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏடிஎம்மில் 13 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 23 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை ஊழியர்கள் நிரப்பிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில் இரண்டு நாட்களில் ஏடிஎம்மில் பணம் இல்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் – ஐ ஆய்வு செய்த பொழுது பணம் எடுக்க முடியாதபடி ஏடிஎம் நம்பர் லாக் செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

 

சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் atm-யில் இருந்த ரகசிய பின் நம்பர் சிஸ்டத்தை பயன்படுத்தி 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.