50 வயதாகியும் இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?
தமிழ் சினிமாவில் திருமண வயது கடந்தும் சிங்கிளாகவே இருக்கும் நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி அனுஷ்கா ஷெட்டி, கிரண், தபு, பூனம் பாஜ்வா, திரிஷா, டாப்ஸி, ஸ்ருதிஹாசன், நக்மா, கோவை சரளா, ஆண்ட்ரியா என நிறைய நடிகைகளை கூறலாம்.
அப்படி 50 வயதை தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் சித்தாரா. இவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் ரஜினியின் படையப்பா படம் தான், அதில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார்.
சித்தாரா சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ஒருவரை காதலித்துள்ளார், ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. அந்த நினைப்பிலேயே தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாராம்.
இவர் தன் வாழ்வின் துவக்கத்திலேயே திருமணம் செய்து கொள்ள கூடாது என முடிவு செய்திருந்ததால் அந்த முடிவில் இருந்து அப்படியே இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




