இரவில் வானில் தோன்றிய ஒளிக்கோடுகளால் மக்கள் பீதி..!

மெரிக்காவில் திடீரென்று வானில் மர்மமான ஒளி கோடுகள் எரிந்து கொண்டே சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதிகளில் இரவு நேரங்களில் திடீரென்று வானில் ஒளி கோடுகள் தோன்றியது.

 

இது குறித்து வானியலாளர்கள் கூறுகையில் பூமியின் வளிமண்டலத்தில் விண்வெளி குப்பைகள் மீண்டும் நுழையும் பொழுது இவ்வாறு எரிவதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பார்ப்போரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது.