உடம்பில் கத்தியால் வெட்டி அம்மனை அழைக்கும் விநோத திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புளியம்பட்டியில் உடம்பில் கத்தியால் வெட்டி அம்மனை அழைக்கும் வினோத பண்டிகையில் திரளானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளில் புளியம்பட்டி சௌடேஸ்வரி அம்மன் கோவில் பண்டிகையும் நடைபெறுவது வழக்கம்.

 

முதல் நிகழ்வாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெற்று உடம்புடன் கூர்மையான கத்தி கொண்டு கத்தி போட்டபடி சௌடேஸ்வரிஅம்மன் தாயே என்ற கரகோஷம் எழுப்பியபடி அழைத்தனர்.


Leave a Reply