கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக்கில் அதிவேகமாக சென்ற இரண்டு பேர் லாரியில் மோதி உயிரிழந்தனர். அருகுவிளை பகுதியை சேர்ந்த சுனில், அஜய், கண்ணன் மற்றும் ராஜீவ் ஆகிய நான்கு இளைஞர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து வடசேரி செல்லும் சாலையில் அதிவேகமாக சென்றனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுனில் மற்றும் அவரது சகோதரர் அஜய் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
நெல்லை தேயிலை தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம் - வாக்குவாதம் தீவிரம்
மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தின கொண்டாட்டமா? - ராமதாஸ்
வக்பு வாரியத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் - திமுக கண்டனம்
ஸ்டாலினை வரவேற்ற ஓ.பி.எஸ்..!
தவெக மகளிர் தின விழாவில் தள்ளுமுள்ளு: குழந்தைகளுடன் பெண்கள் முண்டியடித்ததால் பரபரப்பு
நீலகிரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!






