ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.
ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முயன்று வருகின்றனர். இதன் காரணமாக இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக ப சிதம்பரம் சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி சைனி இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேசமயம் இந்த வழக்கு விசாரணைக்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்நிலையில் சிறப்பு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






