நாடாளுமன்ற தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார். முன்னதாக, இன்று அங்கு பிரசார கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
இன்று பிற்பகல் 3:00 மணியளவில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பேரணி செல்கிறார். தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை, இந்த பேரணி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து கங்கை நதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபட உள்ளார். பின்னர் வாராணசி தொகுதியில் நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக , பாஜக தொண்டர்களுடன் காலையில் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதை தொடர்ந்து கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளதாகவும் பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திகள் :
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செயலாளராக சி.மூர்த்தி தேர்வு..!
முதல்வர் வருகையால் இன்று போக்குவரத்து மாற்றம்..!
நாம் தமிழர் நிர்வாகி கைது..!
தமிழக வெற்றி கழக கொடி கம்பம்..உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு..!
திமுக நாளை அமைதி பேரணி..!