பிறந்து 14 நாளே ஆன குழந்தை கொலை.. கொடூர தந்தை கைது
பூமியில் பூத்து 14 நாள்களே ஆன பூவை செடியே கசக்கி எறிந்ததுபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் பச்சிளம் பெண் குழந்தையை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை ஜகத், உடலை குப்பையில் வீசியெறிந்துள்ளார்.
குழந்தையை ஈன்றெடுத்த தாய் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.



