தோட்டக்கலை பண்ணை தொட்டியில் தொழிலாளியின் சடலம் மீட்பு..!
தஞ்சை அருகே மருகுலம் கிராமத்தில் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு பணியாளராக வேலை பார்த்து வந்த தோழப்பன் என்பவர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தோழப்பனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






