ம.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து..!
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தூரில் இருந்து வந்த விரைவு ரயிலின் 2 பெட்டிகள் அதிகாலை தடம்புரண்டு தண்டவாளத்தைவிட்டு இறங்கியுள்ளன.
இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே வந்ததால், ரயில் மெதுவாக சென்றுள்ளது. இதன் காரணமாக, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அண்மைக் காலமாக ரயில் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.






