ஒரே விமானத்தில் பயணிக்க போகும் முதல்வர், ஆளுநர்..!
ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளதால் மதுரையில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ராமநாதபுரத்தில் நடைபெறும் நிகழ்சியில் பங்கேற்க ஆளுநர் இன்று மதியம் ஒரு மணிக்கு விருதுநகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையம் வர உள்ளனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இருவரும் நாளை ஒரே விமானத்தில் மதுரையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு திரும்புகின்றனர்.





