ஜாலி என நினைத்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்பவர்கள், படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே செக் வைத்துள்ளது. இனி, இவ்வாறு பயணித்து அதிகாரிகளிடம் மாட்டினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இப்படி பயணிப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த போதிலும், அவை குறையாததால், இந்த நடவடிக்கையில் தெற்கு ரயில்வே இறங்கியுள்ளது.






