டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆதலால் இன்று டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

 

மேலும், இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் மதுக்கடைகள், பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. எனவே மாநிலம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள், பார்கள் இயங்காது.


டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை..!

க்டோபர் 2 தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினமாகும். அகிம்சையின் அடையாளமாக மதிக்கப்படும் காந்திக்கு மரியாதை அளிக்கும் வகையில், அன்றைய தினம் மது கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கமாகும்.

 

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி யாரேனும் மது விற்றது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.


டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை..!

வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

மாவட்ட ஆட்சியர்களுடன் வாயிலாக காணொளி வாயிலாக ஆலோசனை நடத்திய பிறகு மாநில தேர்தல் ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். தேவைப்பட்டால் மாவட்டம் முழுவதும் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சிவகங்கை, கன்னியாகுமரிம திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.