டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆதலால் இன்று டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மேலும், இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் மதுக்கடைகள், பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. எனவே மாநிலம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள், பார்கள் இயங்காது.






