பாலியல் குற்றங்கள்: விஜய் அதிரடி உத்தரவு..!
பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. வரும் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று, தவெக மகளிர் அணி சார்பில் இந்தக் கருத்தரங்கங்கள் நடத்தப்படவுள்ளன.
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தவெக இந்தக் கருத்தரங்கை நடத்தவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






