பாம்பன் புதிய பாலத்தில் விரைவில் ரயில் சேவையை தொடங்க மக்கள் வலியுறுத்தல்..!
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பாம்பன் பாலம் விழுந்ததால் அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாம்பன் பாலம் வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதிய பாலத்தை விரைவில் ரயில் சேவை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். புதிய பாலப் பணிகள் முடிவடைந்து ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.





