மம்தா பானர்ஜி இல்லத்தில் நடைபெற்ற காளி பூஜை..!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காளி பூஜையில் பங்கேற்றார். பல்வேறு பகுதிகளிலும் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி திருநாளின் பொழுது காளி பூஜை விமர்சையாக நடைபெறும்.
அதன்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் காளி பூஜையை நடத்தினார். அவரது இல்லம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வழிபாட்டுக்கான பிரசாதத்தையும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கை பட சமைத்தார்.






