ஒரே நேரத்தில் 3 குட்டிகளை ஈன்ற பசுமாடு..!
திருவண்ணாமலையில் பசுமாடு ஒன்று ஒரே நேரத்தில் மூன்று கன்று குட்டிகளை ஈன்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் விவசாயி மணி என்பவர் வசித்து வருகிறார்.
இவர் விவசாயம் செய்வதுடன் கரவை மாடு வளர்த்து வருகிறார். அவர் வளர்த்த பசுமாடு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
அந்த பசு மாடு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குட்டிகளை ஈன்றது. பசுமாடு ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை ஈன்ற சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.





