--- --:--:-- --

ஓடும் ரயிலில் இருந்து வெளியே எட்டிப்பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்

Capture

சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து வெளியே எட்டிப் பார்க்கும் போது கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட விக்ரம், அந்த வீரர் பிரிட்ஜின் சந்திப்பிலிருந்து பணி முடிந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி மின்சார ரயில் சென்றுள்ளார்.

ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது .ரயிலின் வெளியே எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது பக்கவாட்டில் உள்ள மின்சார கம்பத்தில் அவரது தலை மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon