அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பிரதமர் மோடி ஆலோசனை..!
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். வெப்ப அலை வீசக் கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் உடன் பங்கேற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






