வணிக நீதிமன்றம் – முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறப்பு
சென்னை உயர்நீதிமன்றம் நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் இன்று பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் முதன்முறையாக வணிக வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பிரிவு கட்டடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டுகிறார். இதன்போது நாமக்கல், விழுப்புரம், சங்கராபுரம் நீதிமன்ற கட்டடம் ஆகியவை திறந்து வைக்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக சட்டத்துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.






