மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஒரு கோடிக்கும் அதிகமான புகார்கள்..!
மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பெறப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததே தற்போது மின்வெட்டுக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
கடந்த ஆட்சியில் மின்சாரத் துறையில் ஏற்பட்ட ஊழல்கள் முறைகேடுகள் குறித்து வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






